Tuesday, March 7, 2017

சிசுவே...

தாய்ப்பால் குடிக்கும் முன்
புட்டிப்பால் புகழறிந்து!

தாலாட்டு கேட்கும் முன்
குறுவட்டு கவி கேட்டு!

பாட்டி வைத்தியம் மறைந்து
ஆண்டிபயாடிக் துணை நிற்க!

அத்தை எனுமுன்
அதனுறவு அறவே இன்றி!

மாமனை காண
மறுஜென்மம் வாய்க்குமென நம்பி!

பிஞ்சுக்கரம் தொடும்
நஞ்சுக்கொண்ட மானிடனை சேர்ந்து
வலையில் சிக்கி
வகையறியாது  உழலும்...

சிசுவே... இனி
சிறந்த இடம் எதுவோ
சிறப்பாக நீ வளர?


No comments:

Post a Comment