Tuesday, March 7, 2017

செந்தமிழ்ச் சாரலில் செய்த கூடு!

செந்தமிழ்ச் சாரலில் செய்த கூடு!
பைந்தமிழ் உரிமையாய் உறையும் வீடு!

மணமணக்கும் சமையலறை நாவிற்கு விருந்தாய்!
கலகலக்கும் நகைச்சுவையோ மனதிற்கு மருந்தாய்!

உலகாளும் தமிழை வளர்க்க
ஒவ்வொரு நாளும் சான்றிதழ் மழை!

தெய்வப்  புலவரை வணங்கி
தினம் ஒரு குறளால் துதிக்கலாம்!

அவ்வையின் பாதம் பணிந்து
அமுத மொழிகள் அறியலாம்!

ஒரே சொல் மந்திரம் போல்
ஓங்கி ஒலிக்கிறது ஒரே சான்றிதழில்!

தினமும் சுவைக்க
திகட்டாத குறும்பா!

ஆழ்ந்த அர்த்தங்களுடன்
ஆன்மீகப்  பதிவுகள்!

வாரத்திற்கு ஒரு விருந்தாளியாய்
வாரக் கவிதைகளும் உண்டு!

சிறந்த கவிஞர்களின் ஆசியுடன்
சீர்மிகு நேர்காணல்!

தமிழைப்  பிழையின்றி கற்க
தாய் போன்ற அரவணைப்புடன் அறிவோம் தமிழ்!

கவிஞர்களுக்கு கொண்டாட்டம் தான்
காலை முதல் இரவு வரை!

No comments:

Post a Comment