Tuesday, March 7, 2017

நீதிக்கு முன்னால்!

நீதிக்கு முன்னால் அனைவரும் சமமென்று
நீதியை முதலில் உலகிற்கு வகுத்துக் கொடுத்து  பின்

தவறு புரிந்தவன் தாம்  பெற்ற பிள்ளையே ஆயினும் தண்டிக்க 
தேர்க்காலில் மகனை இட்டு தாம் வகுத்த நீதிக்கு உயிர் கொடுத்த சோழன்!

தமிழன்னை பாதம் பணிந்து பெற்ற முத்தமிழை
சங்கம் வைத்து வளர்த்து

பாராளும் மன்னன் ஐயம் நீக்க
பாமாலைகள் கோர்த்து மகிழ்ந்து

பாட்டெழுதி தந்தது  வையகமே போற்றி வணங்கும்
பரம்பொருளே  என்றாலும் குற்றமென்று உரைத்து

தமிழின் தரத்திற்கு குறைவராது தடுக்க
தன்னுயிர் தந்து காக்க துணிந்த நக்கீரர்! மாண்புமிக்க

பெரியோர்கள்   துலாக்கோல் போலிருந்து காத்த நீதியை
பேணி நாமும் பாதுகாத்திடுவோம்!

No comments:

Post a Comment