Tuesday, March 7, 2017

சிறை!

சிறையில் சிக்கிவிட்ட
சிறுத்தையோ இவன்?

அன்னையின் அன்புச்சிறையோ அல்லது மனதை
ஆள்பவளின் காதல் சிறையோ?

தினவெடுத்த
தோள்வலிமை கொண்டவனோ?

உடைத்தெறிய உள்ளமின்றி
உரமேறிய தன்  கரங்களுக்குள்ளே

சிறைக்கம்பிகளை
சிறை  வைத்தவனோ?  மாறாக

சிறைக்கம்பிகளுக்கு 
கறை படிந்த கரங்களுடன் 
உரையாடுவதும் பிடித்த வாடிக்கைதான்

தவறிழைத்திருந்தால் தப்பாமல்
பிழையதனை  நீக்கி வீண் 
பழிதனை களைந்து 
வெளி வந்திடு நீ 
விடுதலையாகி!!

No comments:

Post a Comment