Tuesday, March 14, 2017

இருவரிக் கவிதைகள் - 2


மண்

உயிரிகளின் உறைவிடம்
உயிரற்றவைக்கும் புகலிடம்!


வண்ணம்

காட்சிகளுக்கு உயிர்ப்பளித்து
கண்களுக்கு விருந்தாக்கும்!


விதி

கணக்கு போட்டு பழகிய மனம்
எதிர்பாராத செயலை ஏற்க சொல்லும் காரணம்!


அடக்கம்

மனதில் எண்ணங்கள் மிக உயர்வாகவும்
எளிய வாழ்க்கையும் கொண்ட உயர் மனிதர்கள்!


No comments:

Post a Comment