திரவியமான திராவிட வேதம்
திக்கெட்டும் வணங்கி போற்றும்
திவ்ய பிரபந்தமதில் என்றும்
திளைத்திருக்கும் திருமாலே!
செந்தமிழில் பாசுரங்கள்
செய்துவைத்த ஆழ்வார்கள்
செப்பிய கோயில்களில்
செல்வாக்குடன் உறைகின்றாய்!
நம்மாழ்வார் மனதிலே
நலமாய் அமர்ந்துகொண்டு
நான்குவேதங்களையும்
நற்றமிழில் உரைத்துவிட்டாய்!
குருகூர் நம்பி மாறன் புகழ்
குறையிலாது வளர்ந்திடவே
கோரிக்கை வைத்தாய்
கவிச்சக்கரவர்த்தி கம்பரிடம்!
பராங்குசன் காரிமாறனை
பாரெங்கும் பரிச்சயமாக்கிடவே
படைத்தார் கம்பர் அந்தாதியும்
பெருமைமிகு சடகோபருக்கு!
மதுரகவியாழ்வார் மகிழ்ந்து
மனமுவந்தருளிய பாமாலைகள் தம்
மனம்கவர் குருநாதர்
மாறனுக்கு மட்டுமே!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்...
திக்கெட்டும் வணங்கி போற்றும்
திவ்ய பிரபந்தமதில் என்றும்
திளைத்திருக்கும் திருமாலே!
செந்தமிழில் பாசுரங்கள்
செய்துவைத்த ஆழ்வார்கள்
செப்பிய கோயில்களில்
செல்வாக்குடன் உறைகின்றாய்!
நம்மாழ்வார் மனதிலே
நலமாய் அமர்ந்துகொண்டு
நான்குவேதங்களையும்
நற்றமிழில் உரைத்துவிட்டாய்!
குருகூர் நம்பி மாறன் புகழ்
குறையிலாது வளர்ந்திடவே
கோரிக்கை வைத்தாய்
கவிச்சக்கரவர்த்தி கம்பரிடம்!
பராங்குசன் காரிமாறனை
பாரெங்கும் பரிச்சயமாக்கிடவே
படைத்தார் கம்பர் அந்தாதியும்
பெருமைமிகு சடகோபருக்கு!
மதுரகவியாழ்வார் மகிழ்ந்து
மனமுவந்தருளிய பாமாலைகள் தம்
மனம்கவர் குருநாதர்
மாறனுக்கு மட்டுமே!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்...
No comments:
Post a Comment