சிறிது நேரமாவது பூமியை
அணுகாமல் தன் குளிர் போர்வையால்
அணைத்தது மேகம்!
பூமியும் சற்று குளிர்ந்து நன்றி பாராட்டியது!
பாழாய் போன காற்றிற்கு என்ன பொறாமையோ??!!
பதட்டமாய் வந்து சிதறடித்தது மேகங்களை!
வழி தெரியாது இங்குமங்கும் அலைந்து...
வலிமையுடன் மோதிக்கொண்டன மேகங்கள்!
இடி இடித்து தன் துயரை சொல்லி...
'ஹோ' வென்று கொட்டி அழுதது மழையாக!
உதவ முடியாத பூமியும்
வெட்கி குனிந்தது தலை!
அழகான மேகங்கள்!
அரை மணியில் கரைந்து....
பூமியிடமே தஞ்சம் அடைந்தன - சில நாட்களில்...
பூத்த பூக்களின் வாசமும்...
புதியதாய் உதித்த ஜீவராசிகளாலும்...
நன்றிக்கடன் உயர்ந்து
நெஞ்சம் பாரமானது பூமிக்கு...
சகல ஜீவராசிகளும்
சமமென்று உணர்ந்து
சத்துப்பொருள்களை வாரி வழங்கியது - பூமியின்
உயரிய இந்த கோட்பாட்டை
உணராத ஆறறிவு மனிதன்...
தரணியில்...
தான் மட்டும் வாழ நினைத்ததால்
மேகமிட்ட சாபமோ??!!
ஓசோனில் ஓட்டைகள்!!
The uses of clouds is more than we think.
ReplyDelete😊
DeleteVery in depth...nice
ReplyDeleteThank you honey
ReplyDeleteGood
ReplyDelete👍
ReplyDeleteSo u heard? Only special souls do!
ReplyDelete