Thursday, September 22, 2016

வரம் தருவாயா?

புத்தக குவியல்களில்
புதையலாய் கிடைத்த
புது கவிதையின் அழகு!

வீட்டின் வாயிலில்
வாழ்வின் வெற்றியை முன்னமே
கணிக்கும் கண்கவர் வண்ண
கோலங்களின் அழகு!

அலையென அசையும்
கருங்கூந்தலின் அழகு!

பரந்த வானத்தில்
பறவை போல்
பறக்கும் விமானத்தின் அழகு!

தேன் கூட்டை
தட்டி கலைத்தது போல்
பள்ளி முடிந்து
பரவசமாய் ஓடும் பிள்ளைகள் அழகு!

சீட்டுக்கட்டை
அடுக்கியது போல்
பேருந்தில் இடமின்றி
நெருக்கிய பயணத்திலும் அழகு!

அடடா...
வெட்டி எறிந்த
விரலின் நகம் கூட
மூன்றாம் பிறைபோல் அழகோ அழகு!

கம்பன் வீட்டு
கட்டுத்தறி போல் ஆனதை உணர்ந்தேன்  நான்!

 உன் கடைக்கண் பார்வை...
என் எண்ணங்களை
எழிலாக்கி...
என்னையும்
கவியாக்கி...
விந்தைகள் பல புரியும்
வித்தகியானது பெண்ணே!

வரம் தருவாயா??!!
என்றென்றும் சிறந்த கவியரசனாக நான் வாழ!

No comments:

Post a Comment