Friday, September 16, 2016

ஆமையும் முயலும்!

ஆடிப்பாடி வந்த ரயில்
ஆசுவாசப்படுத்தி நின்றது!

அமைதியாக ஆமை போல் உள்ளே சென்று
ஆரவாரக்கூட்டத்தில் ஐக்கியமானேன்!

பள்ளி மாணவர்களின் அரட்டை
பாதி வழி வரை கேட்டது!

பரிட்சை பற்றிய பயமேயின்றி
பகிர்ந்தனர் சந்தோஷங்களை!

விசிறி விற்கும் தாத்தா அனைவருக்கும்
விசிறினார் இலவசமாக!

ஜன்னலில் ஓடிக்கொண்டிருந்த மரங்கள்
ஜனங்களுக்கு வேடிக்கையாக இருந்தது!

பூக்கூடை அம்மாக்கள் ரயிலிலேயே
பூமாலைகளை தொடுத்து நறுமணம் பரப்பினர்!

'கூ' கூவிய ரயில் சத்தம்
குயிலின் குரலாய் ஒலித்தது!

மனமும் மெல்ல தளர்ந்தது
மானசீகமாய் தாளம் போட்டது!

திடுமென போனின் மணியோசை
அனைவரும் திரும்பி எனை பார்க்க - அலுவலக அழைப்பு!

'சாரி சார், கவனிக்கல இப்போ பாக்கறேன்'!
சடுதியில் உரைத்தேன் மன்னிப்பை!

மனமும் முயலென மாறி ஓடியதே
ரயிலின் அழகு மறைந்தும் போனதே!

எல்லா அமைதியும் பறந்தது
எனக்குள் அவசரம்  பிறந்தது!

அழைத்தேன் போனில் உதவிக்கு
அலுவலகத்தின் நண்பர்களை!

ஓரிருவர் உதவினரே  நிறைவாய்
ஒத்தாசை செய்தனரே!

நன்றி நவின்று மகிழ்ந்தேனே
நன்றாய் மீண்டும் அமைதி கொண்டேனே!

மனதில் அமைதி குடி கொள்ள
மீண்டும் ஆமை போல் ஆனேனே!

ரயிலின் அழகும் கூடியதாய்
ரகசியமாய் மனதும் சொன்னதே!

4 comments:

  1. Muyal aamai kadhaiku ippadi oru version aa?
    On the other side.. andha muyalum aamaiyum are actually our very own thought?! Genius writer:)

    ReplyDelete