Friday, September 23, 2016

பரிமளித்திட வேண்டாமோ?


பகல் பொழுதில் வயல் வெளியில்
புல் மேய்ந்த கால்நடைகள் தந்தன
பூமிக்கு தன் சாணத்தை எருவாக
புதியதொரு செடி தோன்ற!

அழகான பூக்களும்
அக்கறையாய் தேன் சொரிந்து
உபசரித்தன மகரந்த சேர்க்கைக்கு
உதவிய வண்டுகளை!

பறவைகளும் பழங்களை உண்டு
பின் தன் எச்சத்தால்
அருகில் பரப்புகின்றது
அம்மரத்தின் விதைகளை!

சின்னஞ்சிறு மீன்களும்
சுத்தமாக்குகின்றன
தஞ்சமளித்த நீர் நிலைகளில்
தங்கும்  அழுக்குகளை தின்று!

இயற்கையாய் நிகழும்
இச்செயல்கள் இவ்வுயிரிகளின்
சிறந்த பண்புகளாய் எண்ணி, எண்ணி
சிலாகிக்க வைக்குதே!

பரிணாம வளர்ச்சியில்
பன்மடங்கு உயர்ந்துவிட்ட மனிதனின்
பண்புகளும் சேர்ந்து
பரிமளித்திட வேண்டாமோ??


2 comments: