Saturday, September 3, 2016

ஜன்னல்கள்

பால் பாக்கெட் விழும் ஓசையில்...
பரவசமான காலையின் விடியல்!

குளியல் ஷவர் நீரின் ஓசையில்...
குதூகலமான மனதின் தொடக்கம்!

காபி  டம்ளர் ஓசையில்...
நாவில் தானே சுரக்கும் எச்சில்!

குக்கர்  விசில் ஓசையில்...
குளிர்ந்தது வயிறு!


மாலை......


பறவைகளின் ஒலியில்...
பரபரப்பு  எழும் மனதில்!

காலிங் பெல் சத்தத்துடன் "அப்பா சாப்பிட்டாரா?"
காதிற்கு மதுரகானம்!


இரவு......


தட்டின் ஓசை...
தாலாட்டாய் கேட்க!

கண் அயர்ந்தேன் நிம்மதியாக....


கண்கள் இல்லாத வாழ்க்கை
கதவுகள் இல்லாத வீடு!

ஓசைகளே என்
ஜன்னல்கள்!

5 comments: