அருமையான வாசம் வீசும்
ரோஜாவின் விதையை விதைத்தேன்...
சூரியனின் ஒளிக்காக வெளியிலும்
அந்தி சாயும் நேரத்தில் வீட்டிற்குள்ளும்
மாறி மாறி வைத்து காத்தேன்
என்னுயிர் ரோஜா விதை
தன்னுயிர் பெறுவதை...
கண நேரமும் நகராமல்
கண் குளிர கண்டு மகிழ்ந்தேன்!
நன்கு பராமரித்து
நான் வளர்த்த ரோஜா செடியில்
நிறைய பூக்கள் பூத்து
நறுமணம் கமழ்ந்தது என் தோட்டம்!!
யாரும் பறித்து விடாமல்
என்றும் காவல் காத்திருந்தேன்!!
ஆனால்...
ஏனோ ரோஜா வாடியதே
ஒரு நாள் பூக்கள் உதிர்ந்தனவே!!
அடடா, அறிந்தேன் வாழ்க்கையதை!
பிறந்தோம் மண்ணில் நல்மானிடராய்
பிறப்பின் பயனை அடைந்தோமா??
ஒரு நாள் உதிர்வோம் ரோஜா போல்!!
அதற்கு முன் அன்பினால் மற்றவர் மனதை
ஆள்வோம் ராஜா போல்!!
No comments:
Post a Comment