Monday, September 12, 2016

எங்கே போகிறோம் நாம்??

குளிரிந்த காலைப்பொழுது உடலுக்கு குறையில்லாத  வலிமையை தரும்!

கண்களுக்கு இதமானது...
கோயிலில் இறைவனை தரிசிக்க புறப்பட உகந்த நேரம்!

பள்ளியில் நடத்தும் பாடங்களை
பசுமரத்தாணிபோல் பதித்துக்கொள்ள மிகவும் சரியான பொழுது!

எட்டு மணி நேர உறக்கத்திற்கு பின்னே
எட்டிப்பிடிக்கப் போகும் உயரத்திற்கு...

மனதளவில் திட்டம் தீட்ட
மகத்தான நேரம்!

படைப்பாளிகளின் இனிய பாமாலைகளை
பாங்காக அமைக்க அமைதியான நேரம்!

உலகின்...

மதிப்பில்லா பொன்னான நேரம் இதுதான் என்று
மட்டற்ற மகிழ்ச்சியில் - பறவைகள்

தன் மென்மை குரலெடுத்து வீதியெங்கும்
தண்டோரா போட்டுக்கொண்டிருப்பதை...

நின்று ரசிக்கக்கூட சிறிது
நேரமின்றி வேகமான உலக வாழ்க்கையில்
நாம் ஓடிக்கொண்டிருந்தாலும்!

அந்த ஜீவன்கள் என்றுமே பாடுவதை நிறுத்தி விடுவதில்லை!!

1 comment: