Monday, September 5, 2016

ஆறாம் அறிவு!

கோலிகுண்டு கண்களும்,
விசிறி போன்ற விரிந்த இமைகளும்,
பிஞ்சு இதழ்களால்
இறுக்க மூடிய வாயுடன்
எனை முறைத்தது 
எதிர் வீட்டுக்குழந்தை!


பிறகு,
அருகில் மெதுவாய் வந்தது,
தயங்கி எனை தொட்டு 
சரேலென கையை பின் இழுத்து,
சந்தேகமாக என் முகம் படித்தது!


மெல்ல என் தலை தடவி,
மிருதுவான கைகளால் முகம் பிடித்து,
மகிழ்ச்சியுடன் என் கன்னத்தில்,
முத்தமிட.....


நான் ஆர்வமேலிட 
நன்றியுடன் சந்தோஷமாக 
குழந்தையின் முகத்தருகே 
குதூகலமாய் சென்ற போது....


"தட் தட்" என் முதுகில் விழுந்த அடியால் 
ஓட்டம் பிடித்தேன் வலியில்.


"யாரம்மா பொறுப்பில்லாம...
நாய் குழந்தைய கடிக்க வருதில்ல? "

கம்பீர குரல் ஒலித்தது தொலைவில்.....

7 comments: