Thursday, September 8, 2016

நிலவே, நீ என் செய்வாய்?

பொன் மாலை வேளையில்....
பூமியை குளிர வைக்க வந்த நிலவே!

திரைகடலோடி
திரவியம் தேட சென்ற மகனை....

தொலைபேசியில்
தொடரமுடியவில்லை!

இணையத்தில் இணைய....
இல்லத்தில் வசதி இல்லை!

புறா விடு தூதும் இனி
பலிக்காது என்று....

கற்றை கடிதங்கள் எழுதி
கன்றிப்போய் வலிக்குதென் விரலே!

உன்னாலும் எனக்கு தூது சென்று ....
உதவ முடியாதென வருந்தி ....

பாவமிந்த தாயென்று...
பார்க்க வந்தாயோ??!!

நிலவே, நீ என் செய்வாய்??!!

இருபக்கங்கள்  கொண்ட பூமிக்கு ஒரே நிலவு!
இங்கு இரவானால், அங்கு பகலாமே??!!



9 comments:

  1. I think that it is the best one yet!

    ReplyDelete
  2. Thank you so much for your continuous feedback.

    ReplyDelete
  3. ஒரு தாயின் ஏக்கம் அந்த நிலவிற்குமட்டும் புரியுமோ ?

    ReplyDelete
    Replies
    1. ஜனா,தாயின் ஏக்கம் புரிய வேண்டியது நமக்கு.
      நிலவு என்றுமே படைப்பாளியின் கருவி.😊.


      Delete
  4. ஒரு தாயின் ஏக்கம் அந்த நிலவிற்குமட்டும் புரியுமோ ?

    ReplyDelete
  5. Lovely and heart melting! This poem of yours took me down the memory lane :))

    ReplyDelete