கடலே கடலே...
அழகிய அலையின் ஓசை...
அசையாமல் கட்டிப்போடும்
அலை பாயும் மனதை!!
இசையாக வருடும் இதயத்தை!!
தலை கேசத்தை
கலைத்து விளையாடும்
கடல் காற்று!!
குட்டை நீரில்
குதித்தாடும் குழவி போல்
மேலும் கீழும் அசைந்தாடும் அலையில்
மெல்ல நகரும் கப்பல்!!
கடல் நீரில்
கால் நனைக்கவும்
கலங்கும் அழகிய
குமரி போல்
கரையில் ஒதுங்கி நிற்கும் படகுகள்!!
தன்னுலகம் எனும் இறுமாப்பில்
துள்ளி திரியும் மீன்கள்!!
ஒப்பில்லாத உன் சக்தியை
உலகிற்கு உணர்த்த
உணர்ச்சிவசப்பட்டு
பேரலைகளால் எங்களை மிரட்டி
பரவசப்படுவதை ஏன் நீ நிறுத்துவதில்லை ??!!
ஒரு வேளை...
நீயும் நிலம் போல
காகித பத்திரமாகி
பத்திரமாக்கப்பட்டுவிடுவாய்
வங்கி பெட்டகத்தில் என்ற பயமோ??!!
அழகிய அலையின் ஓசை...
அசையாமல் கட்டிப்போடும்
அலை பாயும் மனதை!!
இசையாக வருடும் இதயத்தை!!
தலை கேசத்தை
கலைத்து விளையாடும்
கடல் காற்று!!
குட்டை நீரில்
குதித்தாடும் குழவி போல்
மேலும் கீழும் அசைந்தாடும் அலையில்
மெல்ல நகரும் கப்பல்!!
கடல் நீரில்
கால் நனைக்கவும்
கலங்கும் அழகிய
குமரி போல்
கரையில் ஒதுங்கி நிற்கும் படகுகள்!!
தன்னுலகம் எனும் இறுமாப்பில்
துள்ளி திரியும் மீன்கள்!!
ஒப்பில்லாத உன் சக்தியை
உலகிற்கு உணர்த்த
உணர்ச்சிவசப்பட்டு
பேரலைகளால் எங்களை மிரட்டி
பரவசப்படுவதை ஏன் நீ நிறுத்துவதில்லை ??!!
ஒரு வேளை...
நீயும் நிலம் போல
காகித பத்திரமாகி
பத்திரமாக்கப்பட்டுவிடுவாய்
வங்கி பெட்டகத்தில் என்ற பயமோ??!!
No comments:
Post a Comment