Sunday, September 11, 2016

ஆனந்த வெள்ளமே!

தாயின் கருவறையில்
தனியாக தவித்து...

கவிந்த இருளில் 
கண்களிருந்தும்  காட்சிகளின்றி...

உடலை 'ங' ப்போல் 
வளைத்திருந்து

திரும்பக்கூட இடமின்றி 
குறுகியே அமர்ந்து

முன் ஜென்ம நினைவுகள் 
முள்ளாய்   குத்த 

வெளிவர முடியாத 
வேதனை வாழ்க்கை

போதுமிந்த தண்டனையென்று
பொறுமையிழந்து வெளியேற

வழி தேடியலைந்த காலங்களில்
விடுதலை நேரம் என் இருள்
வாழ்க்கையில் விளக்காய் வந்தது! 

ஆனால்... காட்சிப்பழகா கண்களினால்
இத்தனைக்காலம் தன்னுயிராய் எனைக்காத்து

வெளியுலகம் பழக இன்று
விடுவித்த தாயின் முகம் விளங்காது

கதறியழுதபடி கண்ணீருடன் கேட்டேனே  இனிய
குரலை மட்டும் 'கண்ணே கண்மணியே' என்று

ஆனந்த வெள்ளத்தில் மிதந்தேனே 
அம்மாவின் அழகு முகம் பழகுமுன்னே

உணர்ந்து விட்டேன் நான்  
உன்னதமான தாய் மொழியின் அழகை!


5 comments: