சிவந்த கண்கள்
சிறப்பாய் உரைக்கும்
உள்மனதின்
உஷ்ணத்தை!
திசை தெரியாமல் அலைந்து
திரியும் கண்மணிகள்
குழம்பும் சிந்தையை
கண்ணாடி போல் காட்டுமே!
குதூகலமான மனதை
குளிர்ந்த பார்வைகள்
உணர்த்துமே குறையின்றி
உலகிற்கு!
கலங்கிய கண்கள்
வெளிப்படுத்துமே
இதயத்தின்
எழுச்சியான உணர்ச்சிகளை!
தீர்க்கமான பார்வைகள்
தீர்மானித்த முடிவுகளை
திண்ணமாக உரைக்குமே
தடையின்றி!
பார்வையிலேயே
படித்துவிடலாம் உலகின்
பொக்கிஷங்களை
புறக்கண்களால்!
உள்நோக்கி திருப்பினால்
அறியலாம் தன் பிறப்பின்
அர்த்தங்களை
அகக்கண்களினால்!
ஐம்புலன்களிலேயே
அதிசயமாக
கண்களுக்கு மட்டும்
எத்தனை பக்கங்கள்!!
சிறப்பாய் உரைக்கும்
உள்மனதின்
உஷ்ணத்தை!
திசை தெரியாமல் அலைந்து
திரியும் கண்மணிகள்
குழம்பும் சிந்தையை
கண்ணாடி போல் காட்டுமே!
குதூகலமான மனதை
குளிர்ந்த பார்வைகள்
உணர்த்துமே குறையின்றி
உலகிற்கு!
கலங்கிய கண்கள்
வெளிப்படுத்துமே
இதயத்தின்
எழுச்சியான உணர்ச்சிகளை!
தீர்க்கமான பார்வைகள்
தீர்மானித்த முடிவுகளை
திண்ணமாக உரைக்குமே
தடையின்றி!
பார்வையிலேயே
படித்துவிடலாம் உலகின்
பொக்கிஷங்களை
புறக்கண்களால்!
உள்நோக்கி திருப்பினால்
அறியலாம் தன் பிறப்பின்
அர்த்தங்களை
அகக்கண்களினால்!
ஐம்புலன்களிலேயே
அதிசயமாக
கண்களுக்கு மட்டும்
எத்தனை பக்கங்கள்!!
No comments:
Post a Comment