இரண்டாவது தலைமுறை நான்
எடுத்த பின் எழுந்த
அடங்க வொண்ணா
ஆவலாய் தந்தை வாய் திறந்தார்...
கடல் தாண்டி வந்தாலும்
கடந்த காலம் கண்களை கலக்குதென்றார்...
எங்களுக்காக உழைத்து தேய்ந்த அப்பாவின்
ஏக்கத்தை ஆணையாக ஏற்றேன்...
தான் பெற்ற வெற்றிக்கு வித்து
தாயகத்தில் உள்ளதென்றார் குல தெய்வமாக ஒரு மலையில்...
பறந்தோம்... தெய்வ தரிசனம் பெறவும்...
பெற்றோரை மகிழ்விக்கவும்....
தங்குமிடம் தரமிருக்குமோ? நல்ல
தண்ணீர் பருக கிடைக்குமோ? என்ற குழப்பங்களுடன்...
ஆனால்... என்ன ஆச்சர்யம்??
நாற்பது வருடங்களில்
நகரமாய் மாறியிருந்தது சிற்றூர்...
விலையுயர்ந்த கற்களால் பதிக்கப்பட்டு
விண்ணுலகம் போன்ற தங்குமிடம்...
தங்கும் அறையில் கூட
தெய்வீகம் கமழ்ந்தது!
பக்தி பரவசமாய் பிரமிப்போடு
பல முறை சுற்றிவந்தேன் தங்குமிடத்தை...
கிரி வலம் செய்து
குலதெய்வ வழிபாடு நடத்த
குதூகலமாய் கிளம்பினால்...
அட அதிசயமே!!
எங்கு தேடியும் இல்லை மலை...
மனது ஆறாமல்
மற்றவரிடம் விசாரித்ததில் புரிந்தது
மலைக்க வைக்கும் மாற்றத்தை சிற்றூருக்கு
மலை தான் தன்னை தாரை வார்த்து தந்தது என்று...
Very apt one this is what happening in India now ...
ReplyDelete☺
Delete