Tuesday, October 11, 2016

மகத்தான படைப்பு!!

கிணற்றுத்  தவளையாய்
கிடைத்த இடத்தில சுற்றுகிறாய்!

ஓடி ஓடி உழைக்கிறாய்
ஒரு பொருளும் சேமிப்பதில்லை!

ஒரே வேலையை என்றுமே குறையாத
உற்சாகத்தோடு செய்கிறாய்!

உன்னுடன் போட்டி போட்டு
உலகமே ஜெயிக்க பார்க்கிறது!


காலங்கள்  மாறலாம்
உன் வடிவங்களும் மாறலாம்!

ஆனால்...

உன்னை மதிப்பவருக்கு  கிடைக்கும்  புகழ் மட்டும்
ஒருநாளும் குறைவதில்லை!

இந்த உலகிலே
அறிவாற்றலில் மிகச் சிறந்த
மனிதனின் பிரமிக்க வைக்கும்
மகத்தான படைப்பு!

நீ தான்...

காலம் காட்டும் கடிகாரமே!!


1 comment: