Wednesday, October 5, 2016

ஒத்தையடி பாதையிலே!

விடியற்காலை...

பசும்புல் தரையில்
கொட்டிக்கிடக்கும் அழகில்
காலாற நடை பயில வந்தேன்!

ஊரே ஊர்ந்து செல்லும்
ஒத்தையடி பாதையது!

பாதி தூரம் கடக்கும் முன்னே
பகலாகி போகிறது!

இடையிடையே நெருஞ்சி முள்ளால்
இன்னல்கள் வேறு...

பல மைல் நடந்தும்
பாதையின் முடிவு
பகல் கனவு!

பயணத்தை இடையில் விட வழியில்லை
புலி வால் பிடித்த கதையாய்...

தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு
துச்சமாய் தெரிந்த பாதை

நெருங்கி வருகையிலே
நீளுதே மிக அதிகமாய்!

பதறி எழுந்தேன்
படுக்கையை விட்டு
பயங்கர கனவால் அவதியுடன்!

ஒரு வேளை...
வாழ்க்கை கூட
முயற்சிகளால் பின்னப்பட்டு
முற்றிலும் உணரமுடியாத முடிவுகள் கொண்ட
ஒற்றையடி பாதை தானோ??!!

5 comments: