சிசு பேசும் முதல் வார்த்தை
சிறப்பம்சம் பெறுகிறது!
தாயின் மடி மீது
தவழ்ந்து கேட்ட கதைகளே நன்னெறிகள்!
ஆணையிட்ட தந்தையின்
அற்புதமான சொற்கள் மந்திரங்களாகின்றன!
ஆசிரியரின் வாய் மொழியில்
அமுத உரைகள்
ஏற்றமிகு
எதிர்காலத்துக்கு சாசனங்கள்!
மனைவியின் வார்த்தைகள்
மந்திரியின் மதியூகமாகும்!
ஏழையின் சொல் கூட
ஏறும் அனைவர் மனதிலும்
உயிர் பிரியுமுன் அவன்
உரைக்கும் கடைசி வார்த்தைகள்!
வார்த்தைகள் ஆயுதங்களை விட
வலிமையானவை!
மனிதனின் மனதை ஆட்டி படைக்கும்
மந்திரக்கோல் வார்த்தைகளே!
வயதான பின் வரும்
விவேகம்...
மௌனம் பழக
மெனக்கிடவைக்கும்!
ஒரு வேளை...
அதனால் தான்....
கடினமான பற்கள்...
கடக்க கூடாத
கதவுகளாய் உதடுகள் என
வார்த்தைகளை
உற்பத்தி செய்யும்
நாவிற்கு மட்டும்
கடுங்காவலோ??!!
No comments:
Post a Comment