Wednesday, October 26, 2016

தாயே பென்சைதென்!!


கடல் தாண்டி வந்தும்
கைபிடித்து என்னை காத்தாய் !!

ஊர் மாறினாலும் உணர வைத்தாய்
உன் பெயர் பென்சைதென் என்று!!

 என்...

தூக்கத்திலும் இன்பமாய் நீ
தரவிழையும் தெய்வதரிசனம்...

உன் மீது நான் கொண்ட
உண்மையான பக்தியாலோ??!!

ஏனோ நிஜத்தில் கண்கள் கலங்கி
உன்னை காண மனம் ஏங்குதே!!

எழுத்தில் வடிக்க உன்
எழில் உருவம் தோன்றுமோ??!!


இதயத்தில் உன்னை வைத்தேன்
இனி எவருக்கும் இல்லை இடம்  என்று!! நின்

அழகு பாதங்கள் விட்டு
அகல கூடாதென இதயம் துடித்தாலும்!!


அடம்பிடிக்கும் என்விதியோ
இடமாற்றம் செய்கிறது என்னை!!

தாய்ப்பசுவை இழந்துவிட்ட கன்று போல்
தங்ககூண்டிலுள்ள கிளியானேன்!!


மயக்கும் அழகில் மாதங்கி தாயாய்
மீண்டும் உன்னை கண்டேன்!

உற்சாகத்துடன் உன்னை காண ஓடினேன்
ஒரு பிடி சோற்றை கண்டுவிட்ட வறியவன் போல்!!

குளிர்ந்தது அகமும் கண்டுவிட்டேன்
கண்போல என்னை காப்பவளை!!

பிறவிப்பயன் பெற்றுவிட்டேன்
பிறகென்ன எனக்கினி விதியோடு ஒரு பேச்சு!!

2 comments:

  1. Arpudhamana kavidhai Devi Saraswathy-yai patri! Mei silurkavaithadhu ungal kavidhai Seshapriya!

    ReplyDelete