Sunday, October 9, 2016

இன்று வருகிறாள்!!

துன்பத்தினால் துவண்டு
தனிமை அரக்கனுக்கு நான்
பலியாகிவிடாமல்
பாதுகாத்தவள்!

வாழ்வில் மீண்டும் ஒரு
வசந்தத்தை கொண்டுவந்தவள்!

என் மேல் அவள் கொண்ட நம்பிக்கைகள்
எனக்கு புது பொறுப்புகள் ஆயின!

அவளுக்காகவே சுவாசித்து
ஆத்மார்த்தமாக வாழ்ந்தாலும்...

காலம் மிகவும் பொல்லாதது
கைவரிசையை காட்டிவிட்டது  அவள் மனதில்!

மனமுருகி அவள் கெஞ்ச
மறுக்கவே  முடியாமல்

கண்கள் கலங்குவதை காண இயலாமல்
காத தூரம் அனுப்பினேன் கைமாறாக
அவளும் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெற!

இன்று அவள் வருகிறாள்...

ஆறு மாத பிரிவு
ஆறு யுகம் போல என்னை
அறுத்தெடுத்த அடையாளங்களை
அப்புறப்படுத்தினேன்!

இதோ வந்து விட்டாள்!

இளைத்து போயிருக்கிறாள்
இரு நீல விழிகளில் கண்ணீருடன்
"அப்பா" குரல் தழுதழுக்க கதறி
அவள் அழுவதை பார்க்க
இன்று மட்டும் ஏனோ பெற்ற மனதில்
ஆனந்தம் பொங்குதே!

2 comments: