Friday, October 7, 2016

புரியாத புதிர்!!

எதிர் காலம் குறித்த பயத்தை
இளமையில் உதிக்க வைத்து...

வாழ்வின் வெற்றிக்கு இடைவிடாது
உழைக்க வைத்து - பின் மூப்பில்...

கற்ற கல்வியும் நினைவில் தேய்ந்து
கால் பாகம் ஆகிப்போனாலும்...

தாயிடம் சேயாய் பலமுறை
தன்னை மறந்து கேட்ட ஒரே கதை போல்...

திரும்பிப் பார்க்கவைக்கும் வாழ்வின்
தித்திக்கும் தருணங்களை...

நினைக்க நினைக்க மீண்டும்
நிஜம் போல சிலிர்க்க வைக்கும் ஞாபகங்களை...

மூன்றாவது தலைமுறை எடுத்து விட்டாலும்
முழு மூச்சுடன்   அசை போடுகிறாயே!

இளமையில் முதிர்ச்சியை நோக்கியும் - முதுமையில்
இழந்து விட்ட காலத்தை
இடைவிடாது துரத்தியும்...

மீண்டும் என்னை சேயாக்க துடிக்கும்
மனமே...

 நீ எனக்கு ஒரு புரியாத புதிர் தான்!!

1 comment: