புன்னகை பூக்கும் பிள்ளைச்செல்வமே...
பல்லில்லா ஈறுகள் தெரிய...
சின்னஞ்சிறு சிவந்த நாக்கு
சிரிப்பில் மேலண்ணத்தில் ஒட்ட...
கண்களை அகல விரித்து
காட்டிக்கொடுக்கிறாய் உன் கள்ளமனதை!!
மயிலிறகால் தீண்டுவதுபோல்
மயக்க வைக்கும் ஒரு பார்வை!!
மெத்தென்ற பூப்பாதங்கள்
மெல்ல தத்தி நடந்து வர...
பஞ்சு போன்ற கன்னங்களில் என் உதடுகளை
பதிக்க சொல்லி தூண்டில் போட்டு....
பூப்போல அள்ளி உன்னை
பாசத்துடன் கொஞ்ச வைத்து...
கோடி இன்பம் தருகிறாய் வள்ளல்போல்
ஈடேதும் கேட்காமலேயே!
தந்தையென்னை முத்தமிட்டு
திக்குமுக்காடவைக்கிறாய்!!
ஆனந்தம் பொங்கும் மனத்துடன்
அன்பை அனைவருக்கும் பரப்புகின்றாய்!!
பாகுபாடின்றி இவ்வுலகில்
பழகி களித்தாடிடவே...
அறியாமையை அமிழ்தம் போல்
அருந்திவிட்டு வந்தாயோ??!!