Monday, February 13, 2017

நில் கவனி கொல்!

உணவுக்காக அலைகின்றோம் உயிரைக்காக்க விழைகின்றோம்
வயிற்றுப் பசியை  துரத்திடவே   கடலும்  மலையும்  கடக்கின்றோம்

அதிகாலைச்  சூரியனை  எங்கள் உலகின்  விளக்காக்கி
அந்திச் சாயுமுன்னே  இரையைச்  சாய்த்திட  துடிக்கின்றோம்

வென்றுவிட்டால்  ஒருநாள் கழிந்தது எம் வாழ்வில்
இல்லையென்றாலோ எதிரியின் முன் வீழ்வோம் இரையாகி

உணவே பிரதானமானாலும் பிறந்த  இனத்தை  உண்பதில்லை சந்ததியை
உழைக்க மட்டுமே பழக்குகிறோம் எங்களிடம் என்றுமே சோம்பலில்லை

No comments:

Post a Comment