கைத்தொழில் ஒன்று கற்றிடுவோம்
கவலையை கவலை கொள்ளவைப்போம்!
கொதிக்கும் உலகில் வாழ்வதற்கு
குளிர் மண்பாண்டங்கள் செய்திடுவோம்!
மானம் காக்கும் ஆடைகளை தோதாக
நாமே செய்வோம் நெசவு நெய்து!
நெகிழி ப் பையை துரத்திடவே
நல் கூ டை முடைய கற்றிடுவோம்!
ஓவியங்கள் வரைந்திடுவோம்
ஓங்கி நம் கற்பனையை உலகிற்கு உரைத்திடுவோம்!
No comments:
Post a Comment