Thursday, February 9, 2017

இடம் மாறும் இதயம்!

இதிகாசங்களும் சிலாகிக்கும்
இதயங்களின் சங்கமம்!

அண்ணலும் நோக்க அவளும் நோக்க
வண்ண வானவில்லாய் மனம் வளையுது!

புனித நிகழ்வது
மனமும் தன்னால் நெகிழுது!

பேதங்கள் மறந்து
உத்வேகங்கள் பிறந்து...

வார்த்தைகள்   பல கோடி
பார்வையிலேயே கலந்துரையாடி...

கட்டிளங்காளை மெல்லிதயம் சுமக்க மாற்றாக மென்மையான
கன்னியோ வலியவனின் இதயத்தை சுமந்தபின் ...

புதியதாய் பிறந்ததுபோல் இருவருக்குள்ளும்
புதிராக ஒரு தோற்றம்!

No comments:

Post a Comment