கண்ணை மயக்கும் இயற்கை அழகு
விண்ணை முட்டும் அடுக்கு மாடிகள்
விதிகளை மதிக்கும் வாகன ஓட்டிகள்
செடிகளை போற்றி பராமரிக்கும் மக்கள்
பெருமிதம் பொங்க தூரதேச
தெருவீதியில் நடந்தால் எதிரில்
வயதானோரை கண்டதும் மனதில்
வந்துவிடுகிறது பெற்றோரின் முகம்
மகிழ்ச்சி ஓடி ஒளிந்திட
மீண்டும் வீட்டையடைந்து விழுகிறேன் படுக்கையில் வழக்கம் போல்
வேகமாக வீசும் காற்று மட்டும் தனிமை தீர்க்க மூடிய என்
வாசல் கதவை தட்டும்!
No comments:
Post a Comment