Thursday, April 20, 2017

இருவரி கவிதைகள் - 3



கண்ணீர்

இன்ப துன்பங்கள் மனதில் எல்லைதாண்டிவிட்ட
தருணத்தின் அடையாளம்!

தவிப்பு

சிந்தனைகளின்  வேகத்திற்கு ஈடுகொடுத்து
செயல்பட முடியாத நிலையில் தோன்றுவது!

யாசகம்

கழிவிரக்கம் தன்மேல் ஏற்பட வைத்து
தம் தேவைகளை நிறைவேற்ற முயல்வது!


போராட்டம்

 நிராகரிக்கப்பட்ட தேவைகளை அடைய
 வீரத்துடன் நேரிடையாக முயல்வது.

3 comments: