விந்தைகள் செய்ய வந்தாய் பல
சிந்தைகள் கவர விழைந்தாய்!
சுற்றிலும் பெரிய மதில் சூழ் அறை உலகையே
சுட்டுவிடும் ஆதவனுக்கா சிறை?
சங்கொடு சக்கரமும் மின்ன மாயனே
அங்கொரு பிறப்புதான் என்ன?
கார்மேகமுன் வண்ணம் கண்டதும்-மயங்கியதோ
கயிலைநாதரின் எண்ணம் அதனால்தான்
ஆலகாலத்தை உண்டு அர்த்தநாரியும்
நீலகண்டனாய் உருமாறி மகிழ்ந்தனரோ?
பைந்நாகப்பாயில் உன் படுக்கை நன்கு
பள்ளிகொண்டபின்னும் ஏன் வேடிக்கை?
ஆலிலையிலும் துயில இன்னுமோர் ஆராய்ச்சி
அல்லல்பட்டிருப்பாள் உன்னால் யசோதை ஆய்ச்சி
வெண்ணெயுண்ட பாலகன் நீ
மண்ணையுமுண்டு ருசித்தவன்
இளகிய மனதொடு பிரளயத்தில் காத்திடவே
உலகையே உண்ணும் பெருவாயா
உலகம் உண்ட உன் பெருவாயை
வியந்து நோக்கிவிட்ட நல்தாயின் மனதை
கர்வம் பீடிக்கவிடாமல் எந்த மாய
கயிறுகொண்டு கட்டினயோ தாமோதரா?
சிந்தைகள் கவர விழைந்தாய்!
சுற்றிலும் பெரிய மதில் சூழ் அறை உலகையே
சுட்டுவிடும் ஆதவனுக்கா சிறை?
சங்கொடு சக்கரமும் மின்ன மாயனே
அங்கொரு பிறப்புதான் என்ன?
கார்மேகமுன் வண்ணம் கண்டதும்-மயங்கியதோ
கயிலைநாதரின் எண்ணம் அதனால்தான்
ஆலகாலத்தை உண்டு அர்த்தநாரியும்
நீலகண்டனாய் உருமாறி மகிழ்ந்தனரோ?
பைந்நாகப்பாயில் உன் படுக்கை நன்கு
பள்ளிகொண்டபின்னும் ஏன் வேடிக்கை?
ஆலிலையிலும் துயில இன்னுமோர் ஆராய்ச்சி
அல்லல்பட்டிருப்பாள் உன்னால் யசோதை ஆய்ச்சி
வெண்ணெயுண்ட பாலகன் நீ
மண்ணையுமுண்டு ருசித்தவன்
இளகிய மனதொடு பிரளயத்தில் காத்திடவே
உலகையே உண்ணும் பெருவாயா
உலகம் உண்ட உன் பெருவாயை
வியந்து நோக்கிவிட்ட நல்தாயின் மனதை
கர்வம் பீடிக்கவிடாமல் எந்த மாய
கயிறுகொண்டு கட்டினயோ தாமோதரா?
ஆஹா... மிகவும் அருமையான வரிகள்!!
ReplyDeleteமிக்க நன்றி!
DeleteSuperb priya,veryNice keep it up👌👌👌
ReplyDeleteThank you so much Aarthi!
Delete