Tuesday, April 25, 2017

காதல் கள்வன்

நலமாய் நாம்  வாழ
உளமாற நீ நினைக்கின்றாய்!

கவனமுடன் கல்லூரியில் நான் படித்திடவே என்
கண்ணில் பட்டுவிடாது ஒளிந்து ஓடுகின்றாய்!

இலட்சியங்கள் வென்றுவிட்டு பின்
இல்வாழ்க்கை தொடங்கிடவே துடிக்கின்றாய்!

திண்ணமான மனதோடு நீயும் உன்
எண்ணங்களை வெல்கின்றாய்!

பெருமையோடு உனை கொண்டாடிட
பேதை நானும் விழையும் வேளையிலே...

பெரிய கள்வன் நீயென்று உணர்த்துகின்றாய்   நித்தம்
ஏமாற்றி என்னை அணைக்கின்றாய் நள்ளிரவில் வரும் கனவில்!



No comments:

Post a Comment