பாலும் தேனும் தினம் விருந்தாக
நானுமுன்னை வேண்டவில்லை!
பஞ்சுமெத்தை தேவையில்லை நடுசாமத்தில்
கொஞ்சும் சிசுவும் தொல்லையில்லை!
உழைத்து துவண்டிட்ட உடம்பென்றும்
பிழைத்து வாழ்ந்திட தேவை நல்லுறக்கம்!
அன்பு வார்த்தைகளுக்கும் உன்னிடம் பஞ்சமென்றாலும்
என் மனதை கடும் சொல்லம்புகள் படுக்கும் மஞ்சமாக்கிடாதே!
No comments:
Post a Comment