Friday, January 27, 2017

இரக்கமில்லையா...?

ஈடில்லா மனித உயிர் ஏங்குது
ஈகையில்லா இதயங்களால் கண்ணீர் சிந்துது!

கரங்கள் குவித்து வேண்டுது
கழிவிரக்கம் ஏற்படத் தூண்டுது!

ஒருசாண் வயிற்றின் தேவையது
எண்சாண் உடலையும் காக்குமது!

போலியான உலகமோ இது உயிரின் வலி புரியவில்லையா?
காலியான தட்டு நாளையும் பட்டினியெனுதே சிறிதும் இரக்கமில்லையா?

No comments:

Post a Comment