Sunday, January 8, 2017

மயங்குகிறேன் மழைக்காதலியே!

மயங்குகிறேன் மழைக்காதலியே!
மீள்வேனோ விடைத்தோணலியே!

கவனத்தை ஈர்க்க நீ ஒரு காணொலியோ?உன்
மனதிற்கேற்றவன் நானில்லையோ?

மழையை நீ அணைப்பது வீணில்லையோ?என
மனதில் பொறாமை மூளுதே அதற்குப் பண்பில்லையோ?

மரம் போலாகிவிட்டேன் படர்ந்திடு கொடி முல்லையே!
மனதைத் திறக்க எனக்கும் வேறு வாய்ப்பில்லையே!

வெள்ளை உள்ளம் கொண்ட பெண் பிள்ளையே!
சள்ளை செய்ய என் மனதில் சிறிதும் வம்பில்லையே!

என்மேல் உனக்கேதும் அன்பில்லையேல்...
நான் வாழ இனி வேறு உலகில்லையே!

எனை மறுத்தாலும் நீ என்றும் மகிழ்ந்திருக்க வேண்டும்!
உன் வாழ்வு நறுமணம் வீசி மலர்ந்திருக்க வேண்டும்!

மறுபிறவியிலும் நான் உன்னை மறவாதிருக்க வேண்டும்!
முடியாதென்றால் நான் மீண்டும் பிறவாதிருக்க வேண்டும்!

No comments:

Post a Comment