வருக தைமகளே...
வழியெல்லாம் பூப்பூக்க!
வாழ்வு வளம்பெற்று
வையகம் தழைத்தோங்க!
மண்மாதாவை தன்னுயிராய்
மதித்தொழுகும் விவசாயி உயரவேணும்!
தானியங்கள் விளைவித்து தாய்போல்
தரணியையே வாழவைக்கும்...
பூமித்தாயின் தலைமகனவன் நெஞ்சின்
பாரத்தை போக்கிடம்மா!
மும்மாரி பொழிந்து உழவர்களின்
கண்மாரி துடைத்திடம்மா!
ஏர்பூட்டி உழுபவரின்
ஏக்கத்தை தணித்துவிடு!
தைபிறந்தால் வழிபிறக்கும் உன்
தயவிருந்தால் இது பலிக்கும்!
அறுவடை செய்பவர்கள் காலமெல்லாம்
அறுசுவையும் சுவைத்திடனும்!
பொங்கலோ பொங்கலென்று
பெருமகிழ்ச்சியில் பாடிக் கொண்டாடிடனும்!
வருங்கால சந்ததியும் உழவை
வாஞ்சையுடன் கற்றிடனும்!
வழியெல்லாம் பூப்பூக்க!
வாழ்வு வளம்பெற்று
வையகம் தழைத்தோங்க!
மண்மாதாவை தன்னுயிராய்
மதித்தொழுகும் விவசாயி உயரவேணும்!
தானியங்கள் விளைவித்து தாய்போல்
தரணியையே வாழவைக்கும்...
பாரத்தை போக்கிடம்மா!
மும்மாரி பொழிந்து உழவர்களின்
கண்மாரி துடைத்திடம்மா!
ஏர்பூட்டி உழுபவரின்
ஏக்கத்தை தணித்துவிடு!
தைபிறந்தால் வழிபிறக்கும் உன்
தயவிருந்தால் இது பலிக்கும்!
அறுவடை செய்பவர்கள் காலமெல்லாம்
அறுசுவையும் சுவைத்திடனும்!
பொங்கலோ பொங்கலென்று
பெருமகிழ்ச்சியில் பாடிக் கொண்டாடிடனும்!
வருங்கால சந்ததியும் உழவை
வாஞ்சையுடன் கற்றிடனும்!
No comments:
Post a Comment