ஒவ்வொரு நொடியும் ஏந்துகின்றது உலகின்
ஓராயிரம் புதிய செய்திகளை!
தூக்கத்தினால் தொலைத்துவிட்ட பொன்னான நேரத்தை
ஏக்கத்தினால் எழுந்ததுமே ஈடுகட்ட..
சேதி சொல்ல ஒரு தோழியாய்
செயற்கைக்கோள் வந்தாலும்...
காலைக்கடன் முடிக்கும் வேளையிலும்
காகிதத்திலும் மலர்ந்திருக்கும்...
புதுச்செய்திகளையும் பாலகனும் படித்திடுவான்
புதிய உலகத்தை அறிந்துகொள்ளும் துடிப்பிருந்தால்!
No comments:
Post a Comment