Sunday, November 27, 2016

பிச்சைக்காரி!!

அழுக்கேறிய கிழிந்த ஆடைகளுடன்
ஆதரவு தேடி...

வயிற்று பசியுடன்
வாதம் செய்ய முடியாமல்...

பத்தும் பறந்து போக
பரிதாபம் வேண்டி கோயில் வாசலில்...

கரங்களை குவித்தும்
கழிவிரக்கம் ஏற்பட கெஞ்சியும்...

போராடும் வாழ்க்கை எனக்கு
பழகியிருந்தது பல வருடங்களாகவே...

ஆனால் ...

கைகளில் பையுடன் ஒரு விதவை
கிழவியும் இன்று போட்டியாக...

அமர்ந்துவிட்டாள் புதிதாக
அருகில் பிச்சையெடுக்க!!

ஆச்சர்யமளித்தது அவளின்
அழுக்கில்லா ஆடைகளைக்கண்டு!!

"பிச்சைக்கு புதுசா??!!"
புரியாமல் கிண்டலாய் நான் வினவ பதிலுக்கு...

நாற்பது வருடங்களுக்கு முன் இதே கோயில் வாசலில்
நாற்பத்தெட்டு நாட்கள் மலடி பட்டம் நீங்க

பிள்ளைவரம் வேண்டி
பிச்சை எடுத்த அனுபவமிருக்கிறதென்றாள்...

பொட்டிலறைந்தாற்போல்!!

No comments:

Post a Comment