ஒரே தட்டில் சோறுண்டுவிட்டு
ஓரினமாகிவிடும் பண்பினாலும்...
பிறந்த தாய்மடி வேறானாலும்
சிறந்த வழித்துணையாகிவிடும் அன்பினாலும்...
குற்றம் குறைகளை சகிப்பதில்
சுற்றத்தையே விஞ்சத் துடிக்கும் அரவணைப்பினாலும்...
தொய்வில்லா புகழ்தான் என்றும் தோழமைக்கும்
தெய்வப்புலவரவரே போற்றிவிட்ட நல் நட்பென்பதனால்!
Superb chithi
ReplyDelete