Saturday, November 19, 2016

நான் இன்று அவனானேன்!!

தலைமை அதிகாரியான என்  மகன்
திடுதிப்பென்று வந்தான் தாயகத்திற்கு.
தில்லானா ஆடியது என் நெஞ்சம் சந்தோஷத்தில்!!

தாய் பரிமாறிய உணவுகளை
தன்னிறைவோடு ரசித்து உண்டு...

பார்வையில் ஈரத்துடனும் அளவுகடந்த
பாசத்துடனும் 'அப்பா நலமா ?' என்றான்
படுத்திருந்த  என் தலையை கோதியவாரே !!

புயலென நகர்ந்துவிட்டான் அலுவலக அழைப்பினால்
புரியாமல் விழித்து நின்றேன் !!

பல வருடம் பின்னே
பயணித்தது மனமும்..

அவன் 'அப்பா' என்று எனக்காக அழுததும்
அலுவல் நிமித்தம் அலைச்சலால்

புன்னகையுடன் அவனை முத்தமிட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு
பரபரப்பாக நான் பிரிந்து சென்றதும்...

மகனுக்கு வாழ்க்கையில் முன்னேற
முன்னுதாரணம் கொடுக்க நினைத்ததும்...

இன்று என்னால் நன்றாக
உணர முடிகிறது...

உழைப்பின் மேல் நான் என் மகனுக்கு
உருவாக்கியிருந்த ஈடில்லா நாட்டத்தையும்...  கூடவே

பிரிவு பொறுக்க முடியாமல்
பாசத்தில் அவன் சிந்தியிருந்த  கண்ணீரின் வலியையும்...

2 comments: