Wednesday, July 26, 2017

எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

புத்திரபாக்கியம் பெற்றிடவே
புத்திரகாமேஷ்டியாகம் செய்த பெற்றோருக்கு
புத்திரனாய் வந்துதித்த நீ காடேகு என்னும் சொல்லை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

இன்னல்கள் மிகுந்த காட்டில் உறையும் போதும்
மான் வேண்டுமென்ற மனைவியின் ஆவலை
காதல் வரமென்றே மனதில்
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

பத்தினியவளை பாவியவன் கடத்திவிட்டான்
பாதணிகளின்றி  முட்கள் நிறைந்த காட்டில் துணையை  தேடி திரிகையிலும்
தினவெடுத்த தோள்களில் வில்லை  சுமையாக  எண்ணாமல்
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

கடமைகளை ஆற்றிட சொல்லொணா  துயருடன் கடலை கடக்கையிலே
நின்னையும் இளவலையும் இலகுவாக சுமக்கும் அனுமனின்
ஈடில்லா பக்தியதன் சக்தியை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

மாற்றான் மணை நோக்கியவனின் நீங்காத ஆசைகளை
அம்புகளால் துளைத்து களைந்த நீ
அவன் இலவளின் தூய பக்தியை  ஏற்று
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

கல்லான அகலிகைக்கு சாபமதை நீக்கி பின் நின் மனைவியின்
கற்பை  உலகிற்கு உணர்த்திட தீக்குளி எனும் வேளையிலே
கல்லாய்  கனத்த  உன் நெஞ்சின் பாரத்தை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

பெண்களுக்கு பெருமதிப்பை பெற்று தந்த
பெண்தெய்வத்துடன்  அரியாசனத்தில் அமர்கயிலே
போற்றி வணங்கிய உயிர்களின் அன்பை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

No comments:

Post a Comment