கட்டுத்தறியையும் கவிசொல்ல வைக்கும்
கவிச்சக்ரவர்த்தியின் மனம்கவர் கதாநாயகனவன்!
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை என உலகத்தோர்
சிந்தையில் செதுக்கிய தவப்புதல்வன்!
சுயம்வரத்தில் வில்முறித்து தன் வீரத்தை
நயம்பட உரைத்து நின்றான்!
கன்னியவள் நெஞ்சினிலே
எண்ணியபடி இடம்பிடித்தான்!
தாரைவார்க்கு முன் அறிமுகமான அயோத்தி இராமன்
தாரத்திற்கு உணர வைத்தான் இராமனிருக்கும் இடமே அயோத்தியென!
கவிச்சக்ரவர்த்தியின் மனம்கவர் கதாநாயகனவன்!
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை என உலகத்தோர்
சிந்தையில் செதுக்கிய தவப்புதல்வன்!
பெண்மையை போற்றுகின்ற
பேராண்மை படைத்தவன்!
கற்புநிலையை பொதுவில் வைத்து
ஒருவனுக்கு ஒருத்தியென்றான்!
பத்துதலை இராவணனை நிராயுதபாணியாக்கி
பித்துக்கொள்ள வைத்திட்டான் மாறாக
இரக்கமில்லா தாடகையை பெண்ணென்பதால் மனதில்
கலக்கம் மிகக் கொண்டே வதைத்திட்டான்!
பேராண்மை படைத்தவன்!
ஒருவனுக்கு ஒருத்தியென்றான்!
பித்துக்கொள்ள வைத்திட்டான் மாறாக
கலக்கம் மிகக் கொண்டே வதைத்திட்டான்!
அகலா பெருந்துயருடன் கல்லாகியிருந்த
அகலிகையின் சாபத்தை போக்கியவன்!
அகலிகையின் சாபத்தை போக்கியவன்!
நயம்பட உரைத்து நின்றான்!
எண்ணியபடி இடம்பிடித்தான்!
தாரைவார்க்கு முன் அறிமுகமான அயோத்தி இராமன்
தாரத்திற்கு உணர வைத்தான் இராமனிருக்கும் இடமே அயோத்தியென!
No comments:
Post a Comment