Tuesday, May 2, 2017

கண்ணே கண்மணியே....

அறியாமையை  அணிந்துகொண்டு
என் வயிற்றில் வந்துதித்த  அற்புதமே!

மழலை மொழி கேட்டு  மகிழ்கின்றேன்
தாயெனும் தகுதிக்கு உயர்கின்றேன்!

ஏழைத்தாய் என்னையும்  முத்தமிட்டு
இறுமாப்புக்கொள்ள வைக்கின்றாய்!

இமயத்தை கூட தலையில் சுமந்திடுவேன் 
இன்னலின்றே நீ வளர்ந்திடவே!

1 comment: