Saturday, May 6, 2017
தேநீர் விருந்து
இளங்காலை பொழுதென்றால்
இளங்காளை எழுகின்றேன்
இன்முகத்து அருந்தாயின்
உபசாரம் மனமீதில்!
Wednesday, May 3, 2017
பரிதவித்தாய்
பசித்த சிசுவின்
தவிப்பு அறிந்தாள்
உடைத்த கல்லும்
கூறிற்று வலியை
Tuesday, May 2, 2017
கண்ணே கண்மணியே....
அறியாமையை அணிந்துகொண்டு
என் வயிற்றில் வந்துதித்த அற்புதமே!
மழலை மொழி கேட்டு மகிழ்கின்றேன்
தாயெனும் தகுதிக்கு உயர்கின்றேன்!
ஏழைத்தாய் என்னையும் முத்தமிட்டு
இறுமாப்புக்கொள்ள வைக்கின்றாய்!
இமயத்தை கூட தலையில் சுமந்திடுவேன்
இன்னலின்றே நீ வளர்ந்திடவே!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)