Saturday, May 6, 2017

தேநீர் விருந்து

இளங்காலை பொழுதென்றால் 
இளங்காளை எழுகின்றேன் 
இன்முகத்து அருந்தாயின் 
உபசாரம் மனமீதில்!


Wednesday, May 3, 2017

பரிதவித்தாய்


பசித்த சிசுவின் 
தவிப்பு அறிந்தாள் 
உடைத்த  கல்லும் 
கூறிற்று வலியை 

Tuesday, May 2, 2017

கண்ணே கண்மணியே....

அறியாமையை  அணிந்துகொண்டு
என் வயிற்றில் வந்துதித்த  அற்புதமே!

மழலை மொழி கேட்டு  மகிழ்கின்றேன்
தாயெனும் தகுதிக்கு உயர்கின்றேன்!

ஏழைத்தாய் என்னையும்  முத்தமிட்டு
இறுமாப்புக்கொள்ள வைக்கின்றாய்!

இமயத்தை கூட தலையில் சுமந்திடுவேன் 
இன்னலின்றே நீ வளர்ந்திடவே!