Friday, February 10, 2017
Thursday, February 9, 2017
தூரதேசம்...
கண்ணை மயக்கும் இயற்கை அழகு
விண்ணை முட்டும் அடுக்கு மாடிகள்
விதிகளை மதிக்கும் வாகன ஓட்டிகள்
செடிகளை போற்றி பராமரிக்கும் மக்கள்
பெருமிதம் பொங்க தூரதேச
தெருவீதியில் நடந்தால் எதிரில்
வயதானோரை கண்டதும் மனதில்
வந்துவிடுகிறது பெற்றோரின் முகம்
மகிழ்ச்சி ஓடி ஒளிந்திட
மீண்டும் வீட்டையடைந்து விழுகிறேன் படுக்கையில் வழக்கம் போல்
வேகமாக வீசும் காற்று மட்டும் தனிமை தீர்க்க மூடிய என்
வாசல் கதவை தட்டும்!
உனக்காக!
உனக்காக!
சுயமதிப்பு மிக்க என் மனதிலும் ஒரு அரியாசனம் அங்கு
சுயம்புவாக தோன்றிவிட்ட உனக்காக!
உதிர்ந்தபின் திரும்பப்பெறவே முடியாத மதிப்புமிக்க
வார்த்தைகள் என்றுமே உனக்காக!
இழந்து விட்டால் மீட்கவே முடியாத பொக்கிஷமான
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என்றுமே உனக்காக!
அகங்காரத்தை அழித்து என் மனதை
அலங்காரமாக்கினேன் உனக்காக!
அலங்காரமாக்கினேன் உனக்காக!
சுயம்புவாக தோன்றிவிட்ட உனக்காக!
உதிர்ந்தபின் திரும்பப்பெறவே முடியாத மதிப்புமிக்க
வார்த்தைகள் என்றுமே உனக்காக!
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என்றுமே உனக்காக!
இடம் மாறும் இதயம்!
இதிகாசங்களும் சிலாகிக்கும்
இதயங்களின் சங்கமம்!
அண்ணலும் நோக்க அவளும் நோக்க
வண்ண வானவில்லாய் மனம் வளையுது!
புனித நிகழ்வது
மனமும் தன்னால் நெகிழுது!
பேதங்கள் மறந்து
உத்வேகங்கள் பிறந்து...
வார்த்தைகள் பல கோடி
பார்வையிலேயே கலந்துரையாடி...
கட்டிளங்காளை மெல்லிதயம் சுமக்க மாற்றாக மென்மையான
கன்னியோ வலியவனின் இதயத்தை சுமந்தபின் ...
புதியதாய் பிறந்ததுபோல் இருவருக்குள்ளும்
புதிராக ஒரு தோற்றம்!
இதயங்களின் சங்கமம்!
வண்ண வானவில்லாய் மனம் வளையுது!
மனமும் தன்னால் நெகிழுது!
பேதங்கள் மறந்து
உத்வேகங்கள் பிறந்து...
வார்த்தைகள் பல கோடி
பார்வையிலேயே கலந்துரையாடி...
கட்டிளங்காளை மெல்லிதயம் சுமக்க மாற்றாக மென்மையான
கன்னியோ வலியவனின் இதயத்தை சுமந்தபின் ...
புதிராக ஒரு தோற்றம்!
Tuesday, February 7, 2017
Subscribe to:
Posts (Atom)






