Friday, February 10, 2017

வெண்பா

புள்ளினம் பூவிதழ்ப் பூமகளைக்   கண்டதும்

துள்ளின பந்துபோல் தன்னினம் என்றன

மனதின் களிப்பில் மயங்கி -வியப்பில்

கனவில் மகிழும்  கண்டு!

Thursday, February 9, 2017

தூரதேசம்...


கண்ணை மயக்கும் இயற்கை அழகு
விண்ணை முட்டும் அடுக்கு மாடிகள்

விதிகளை மதிக்கும் வாகன ஓட்டிகள்
செடிகளை போற்றி பராமரிக்கும் மக்கள்

பெருமிதம் பொங்க தூரதேச
தெருவீதியில் நடந்தால் எதிரில்

வயதானோரை கண்டதும் மனதில்
வந்துவிடுகிறது பெற்றோரின் முகம்

மகிழ்ச்சி ஓடி ஒளிந்திட
மீண்டும் வீட்டையடைந்து விழுகிறேன் படுக்கையில் வழக்கம் போல்

வேகமாக வீசும் காற்று மட்டும் தனிமை தீர்க்க மூடிய என்
வாசல் கதவை தட்டும்!

உனக்காக!

உனக்காக!

அகங்காரத்தை அழித்து என் மனதை
அலங்காரமாக்கினேன் உனக்காக!

சுயமதிப்பு மிக்க என் மனதிலும் ஒரு அரியாசனம்   அங்கு
சுயம்புவாக தோன்றிவிட்ட உனக்காக!

உதிர்ந்தபின் திரும்பப்பெறவே  முடியாத மதிப்புமிக்க
வார்த்தைகள் என்றுமே  உனக்காக!

இழந்து விட்டால்  மீட்கவே முடியாத பொக்கிஷமான
என்  வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என்றுமே உனக்காக!

இடம் மாறும் இதயம்!

இதிகாசங்களும் சிலாகிக்கும்
இதயங்களின் சங்கமம்!

அண்ணலும் நோக்க அவளும் நோக்க
வண்ண வானவில்லாய் மனம் வளையுது!

புனித நிகழ்வது
மனமும் தன்னால் நெகிழுது!

பேதங்கள் மறந்து
உத்வேகங்கள் பிறந்து...

வார்த்தைகள்   பல கோடி
பார்வையிலேயே கலந்துரையாடி...

கட்டிளங்காளை மெல்லிதயம் சுமக்க மாற்றாக மென்மையான
கன்னியோ வலியவனின் இதயத்தை சுமந்தபின் ...

புதியதாய் பிறந்ததுபோல் இருவருக்குள்ளும்
புதிராக ஒரு தோற்றம்!

நீயும் என் தாய்!

மேய்ச்சலுக்கு நீ  போகும் நேரம் மனமும்
பாய்ச்சலில் உன்னை த் தொடர்ந்து ஓடும்! 

கறந்த உன் மடிப்பாலை  குடிப்பதால்  புதியதாய்
பிறந்த உன் கன்றுபோல் நானும் உன் சேய் தான்!

அம்மா எனக் கூவி நீ  கன்றை  அழைக்கையிலே ஏனோ
சும்மா என் மனம்  செவலை கொள்வதால் நீயும் என் தாய்தான்!

Tuesday, February 7, 2017

கைத்தொழில்!

கைத்தொழில் ஒன்று கற்றிடுவோம்
கவலையை  கவலை கொள்ளவைப்போம்!

கொதிக்கும் உலகில் வாழ்வதற்கு
குளிர் மண்பாண்டங்கள் செய்திடுவோம்! 

மானம் காக்கும் ஆடைகளை தோதாக
நாமே செய்வோம் நெசவு நெய்து!

நெகிழி ப் பையை துரத்திடவே
நல் கூ டை முடைய கற்றிடுவோம்!

ஓவியங்கள் வரைந்திடுவோம்
ஓங்கி நம் கற்பனையை உலகிற்கு  உரைத்திடுவோம்!

பாசம்!

அன்பால் இணைந்த பந்தங்களின்
அடிமனதில் குடிஇருக்கும்!

உரிய நேரத்தில் ஓடிவரும்
உரிமையோடு துன்பமதை  பகிர்ந்துகொள்ளும்!

பகிர்ந்த  இன்பம்   மேலும்  பெருகும்
புதிரான  அமுதசுரபி!

பாசவலையது சிக்கியவர்களுக்கு  என்றும்
பாதுகாப்பாய்   உணரும் நிலையது!